Tuesday, 2 December 2014


''தர்ஷீல் குட்டி பிறந்தநாள்
        நல்  வாழ்த்துக்கள் "
 (நான்காம் ஆண்டு  பிறந்த நாள் )     (04-12-2014)
அன்பான செல்வமுத்தே  அழகான பவழமுத்தே
இன்பமான தங்கமுத்தே  எங்கள் வீட்டின் சிங்கமுத்தே,
உன்னைக்கான வேண்டியிங்கு ஒவ்வொருநாள் தவமிருந்தோம்
கண்ணான கண்மணியே -எங்கள்கவலைத்தீர நீ பிறந்தாய்,

முன்னோர்கள் புண்ணியத்தால்  கண்ணாயிங்கு நீ பிறந்தாய்
முத்தான இரத்தினமே -உன்  முகம்பார்த்து மனம்மகிழ்ந்தோம்
தனலட்சுமி ஈன்றெடுத்த  தங்கமான ரோஜாவே
தரணி புகழ் அடைய வேண்டும்  தர்ஷில் எங்கள் இராஜாவே ,

குட்டியப்பார் கிருபையாலே  சுட்டிப்பிள்ளை  நீ பிறந்து
கட்டிமுத்தம் தந்தோமடா  குட்டிமுத்து தவப்புதல்வா
கந்தசாமி  அஞ்சலையின்  சொந்தமான  வாரிசே நீ ,
பந்த பாசம் நிறைந்த -எங்கள் பாசமுள்ள குணசீலா
குட்டியப்பார் அருளாலே எங்கள் குலம்காக்க பிறந்தவனே
பட்டிகுடிக்காட்டு உன் தாய்  தனத்திற்க்கும் பக்கபலம் நீதானே !

அன்னை,தந்தையர்க்கு அருந்தவத்தால் வந்துதித்த
சின்னமணி ச்சுடரே   சிங்கார வடிவேலா
தென்னை மர நிழல் போல  தென்றலாக வீசவேண்டும்
தேவஸ்தான புடையூரில்  திருமாலாய் திகழவேண்டும்
பனை,தென்னை,மரம் போல  பயனாக திகழவேண்டும்
உன்னையீன்ற பெற்றோர்கள்  உள்ளம் மகிழவேண்டும்.!

                       அன்புடன் 
            பட்ட க்குடிக்காடு -இரா கோவிந்தராசு 
அயிலண்டம்மாள் , இராமசாமி ,அஞ்சலை ,கந்தசாமி 
இரா.கோவிந்தராசு கண்ணகி , கோ . இராஜலட்சுமி,கோ . இராகுல் ,
அ .கொளஞ்சி. கொ .செல்வாம்பாள் கொ .சந்தோஷ்குமார்,
 கொ .செல்வகுமாரி , கொ . அருண்குமார்  
மற்றும் ,  அப்பா  க . குட் டி முத்து , அம்மா,  கு. தனலட்சுமி , 
தங்கை   கு, நிகிதா .     
சாபர்மதி,அகமதாபாத் ,குஜராத்------(04-12-2014) 

Thursday, 6 November 2014

                                     '' பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''


                                  அன்பு எனும் விதை விதைத்து               
                                  ஆசை எனும்  நீர் ஊற்றி
                                  இன்பம் எனும்  செடி முளைத்து
                                  இனிமையான  மலரான     
                                  எங்கள் வீட்டு தோட்டத்து 
                                  தங்கமான  ரோஜாவே ,-நீ 
                                  பண்பான  பாசமலர் 
                                  பாங்கான வாசமலர்    
                                  அன்பான நேசமலர்  
                                  அனைவருக்கும் ஏற்ற மலர்
                                   
                                  நீ  உதித்த  07-11-1988அந்நாள் 
                                  எங்களுக்கு பொன்னாள்
                                  வாடாமலராக வாசம் தரும் 
                                  ரோஜாவாய் - எப்பொழுதும்-நீ   
                                  வாழ்வாங்கு வாழ்ந்திடவே 
                                  வைய்யகத்து கடவுளிடம் -நாங்கள் 
                                  கை கூப்பி வணங்குகின்றோம்     
                                   நீ, பிறந்த  07-11-2014இந்நாள்     
                                 

                                          அன்புடன் ,
                                       
                                 கணவர் ,க குட்டிமுத்து, மகன்,கு.தர்ஷில் -மகள் ,நிகிதா,
                                 பெற்றோர் ,இரா,கோவிந்தராசு -கோ.கண்ணகி,
                                 சகோதரி,கோ.இராஜலட்சுமி,-சகோதரன் கோ.இராகுல் ,
                                 பாட்டி -இரா.ஆயிலாண்டம்.-க.அஞ்சலை 
                                 மாமா -அ .கொளஞ்சி ,அத்தை  செல்வாம்பாள் 
                                 சந்தோஷ்குமார் ,குமாரி அருண்.
                                    
                                        ( 07-11-2014-) சாபர்மதி  குஜராத் .

Monday, 29 September 2014


 ''   பிறந்த நாள்  நல வாழ்த்துக்கள் ''

               
 கோ.இராஜலட்சுமி

உடல் ஆரோக்கியமும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
வளமான வாழ்வும்
வற்றாத நீர் ஊற்றாய்
வாடாத மலர் போன்று
பெற்றவர்கள் நல்லாசியும்
உற்றார்களின் நல்லன்பும்
நிறைந்த செல்வமும்
நீண்ட ஆயுளும் பெற்று
எல்லாம் வல்ல
இறைவன் அருள் பெற்று
பல்லாண்டு வாழ்கவென்று
நல்லாசி வழங்குகின்றோம்
நாங்கள் ஈன்ற நல்மணியே !

அன்புடன்
அப்பா .இரா.கோவிந்தராசு
அம்மா  கோ.கண்ணகி.
தம்பி -கோ.ராகுல்
பாட்டி -இரா.அகிலாண்டம்.
க. அஞ்சலை
மாமா -க. குட்டிமுத்து,
அக்காள் -கு.தனலட்சுமி
தர்ஷில்,நிகிதா ,
கொளஞ்சி,செல்வாம்பாள்
சந்தோஷ்குமார்,
செல்வகுமாரி ,அருண்குமார்

   தேதி -(30-09-2014)
           சாபர்மதி 

Saturday, 20 September 2014

''பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''


     ''பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''
      -----------------------------------------
      (21-09-2014) தே .புடையூர் )

        "பொன்னழகி நிகிதா "   
      ---------------------------------------

கொடியில்பூத்தகுண்டு மல்லி ,-எங்கள்
மடியில் தவழும் மதுரை மல்லி ,
முகம்பார்த்தால் முத்தழகி -குட்டி
முத்து தனம் ஈன்றபெண்ணழகி ,
புடையூரில் பிறந்த பொன்னழகி
பொன்சிரிப்பு  முக கண்ணழகி ,
அழகில் இவள் கிளியோபட்ரா
அன்னநடையில்  ஊர்வசி ,
கண்களோ விண்மீன்கள்
காந்தம் போன்ற பார்வை
மேனி மேனகைமெல்லிடை ரதி ,
நாணிய முகத்தாள்
நகைக்கும் செவ்விதழ் ,
பற்களோ  முத்துக்கள்
பவழம்போன்ற  கன்னம்
முத்துக்கு கிடைத்தஇரத்தினம்
தனலட்சுமி பெற்ற தங்க பதுமை,
சொக்கவைக்கும் சுந்தரி
நிக்கிதா எங்கள் செளந்தரி ,-உன்
மூன்றாமாண்டுபிறந்த நாளில்
ஆண்டவன் அருளால்
நீண்ட ஆயுளும்நிறைந்த செல்வமும்
கல்வியில் உயர்ந்துகளிப்படைய
வேண்டுமென எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
பல்லாண்டு வாழ்க -என
நிக்கிதா உன்னை நாங்கள்
நெஞ்சார வாழ்த்துகின்றோம்.!

          அன்புள்ள ,
அப்பா-க.குட்டிமுத்து,அம்மா - கு.தனலட்சுமி-
அண்ணன் -கு.தர்ஷில்
பாட்டி-அஞ்சலை-கந்தசாமி ,அகிலாண்டம்-இராமசாமி
தாத்தா-பாட்டி இரா.கோவிந்தராசு-கண்ணகி,
மாமா-கோ.இராகுல்   சித்தி -கோ.இராஜலட்சுமி
தாத்தா-பாட்டி -அ கொளஞ்சி -செல்வாம்பாள்
k . சந்தோஷ்குமார் k ,செல்வகுமாரி , k அருண்குமார்.

                   (தேதி-21-09-2014)

Wednesday, 27 August 2014

"வாழ்க பல்லாண்டு ''

"வாழ்க  பல்லாண்டு  ''




 செடியில் பூத்த
இருமலர்கள்
நொடியில் காய்த்து
கனிந்ததுபோல் ,
எங்கள் -
மடியில் தவழ்ந்த
மழலைகளுக்கு
மணம்முடிந்த
நாட்க்களோ இன்று
முக்கால் மாம்பாகத்தை 
தொட்டது .
கண்ணிமைக்கும்
நேரத்திலே காததூரம்
கடப்பதைபோல்
எண்ணிப்பார்த்தால்
இவ்வாண்டு
எளிதாய் முடிந்தது
பத்தாண்டு.

புண்ணியம் செய்த
பூந்தளிரெ -தே -
புடையூர் மண்ணின்
பாசமலரே,
கண்ணியமாக
நீங்கள் நடந்து
கடமை உணர்வோடு
வாழ்க்கை புரிந்து
கட்டுப்பாட்டை
கடைப்பிடித்து
ஒட்டுமொத்த 
வாழ்க்கையில்
நீங்கள்
ஒளிவிளக்காய்
திகழ்ந்திடுவீர் .

ஆலமரத்தின்
விழுதினைப்போல
நம்மை -அண்டியபேருக்கு
தொண்டுகள் செய்து
நம் -குலம் காக்கும்
பெண்மணியே
நலமருளும்
நன்மைகள் செய்து 
உலகம் போற்றும்
உத்தம தம்பதி-என
உயர்ந்த மதிப்பினை
பெறவேண்டும்.
அதில் -உள்ளம்  மகிழ்வு அடைய வேண்டும்.

பட்டிகுடிக்காடு
இரா.கோவிந்தராசு.
மற்றும், குடும்பசகிதம்.
சபர்மதி,
அகமதாபாத்,
குஜராத்.(27 08 2014)



"உன்னத திருநாள் திருமண பொன்னாள்"

"உன்னத   திருநாள்
திருமண பொன்னாள்"

திருமண மேடைக்கண்ட
திகட்டாத நன்னாள்
இருமனம் ஒன்றுசேர்ந்த
இன்பமான பொன்னாள்
உல்லாசப்பறவைகளாய்
ஒன்றிணைந்த அன்னாள் -நல்
ஒளிவிளக்கு ஏற்றிவைத்த
உன்னதத் திருநாள்.
பத்தாண்டு  இல்வாழ்க்க
பயணித்த தம்பதியே
புத்தாண்டு பதினொன்றில்
புகுகின்ற  இந்நாளில்,
முத்தான  பதியுனக்கு 
முக்கண்ணன் பரிசளித்தான்
 

சுட்டியான மழலைரெண்டு
குட்டியப்பார் அருள்பாலித்தார்
வற்றாதப்  பொய்கையைப்போல் 
வளமான  வாழ்வு பெற்று
வையத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்திடவே,
பொன்னான திருநாளாம்
திருமண  நாள் நன்னாளில் 
உற்றோரும்,பெற்றோரும்
உளமார பாராட்டி
நல் வாழ்த்து  நவில்கின்றோம்
தங்கள் இல் வாழ்க்கை
சிறந்திடவே. !

அன்புடன்,
ரா.கோவிந்தராசு, கோ.கண்ணகி,
கோ.ராஜலக்ஷ்மி, கோ.ராகுல்,
ரா.அகிலாண்டம், க.அஞ்சலை,
அ.கொளஞ்சி, கொ.செல்வம்பாள்,
கொ.குமார், கொ.குமாரி, கொ.அருண்
தேதி: 27/08/2014

Tuesday, 29 July 2014



                                            " பொன் மொழிகள் "

                                  அம்மாவின் அன்பான நல்லாசியும்
                                  அப்பாவின் அருள் வாக்கும்,
                                  குருவின் நல்ல உபதேசமும்,
                                                    இம்மூன்றும்
                                  ஒருவர் வளமான  வாழ்க்கையில்
                                   நிழல்  போன்று  எப்பொழுதும்
                                   உறுதுணையாக இருக்கும்.

                                  மேலே உள்ள மூன்றையும்
                                  எவன் ஒருவன் உதாசின
                                  படுத்துகின்றானோ  அவன்
                                  வாழ்க்கையில்  வசந்தத்தை
                                  இழந்து       இருட்டறையில்
                                  தடுமாறுவது நிச்சயம் உறுதி !

                         
                                  பட்டிக்குடிக்காடு ஆர்.கோவிந்தராசு
                                                   (29-07-2014)
                                                               
                                  அம்மா  உயிர்மூச்சு ,
                                  அப்பா  உடம்பின் குருதி,
                                  மனைவி  இரு கண்கள்,
                                  பிள்ளைகள்  கை, கால்கள்
                                  ஆனால் ,
                                  நீயோ  அவர்களின்  உலகம் .!
                                  நீ தான்  அவர்களின்  இதய
                                  நாடி துடிப்பும், !
                               
                                 கோடி ,கோடியாக பணங்கள்
                                 குவியாவிட்டாலும்
                                  ஓடி வந்து ,உன்னருகில்
                                 வாடிய நேரத்தில் வந்து
                                 உதவுபவன் எவனோ
                                 அவனே உண்மையான
                                 உற்றத்  தோழனாவான்  .!                              
                               
                                 ஆடுவான் மயிலாட்டம்,
                                  பாடுவான் குயில்பாட்டு 
                                  ஆனால் ,
                                 நீ  வாடும்போது மட்டும்
                                  ஓடுவான்  எவனோ
                                 அவனில்லை
                                  உற்றத் தோழன்.!   
                                                 
                                பெண்கள்  நாட்டின்  கண்கள்
                                அவளே சமுதாய நலத்தின்
                                பெரும் தூண் கள் ,!
                               
                                 ஆண்களைப்போல
                                 பெண்களை  சமமாய்
                                 அகில உலகமே மதிக்கணும்,!

                                 தாய்,தந்தையை தள்ளி
                                 வைக்காதே,
                                 தாரத்திற்கு என்றுமே
                                 பழிகள் நீனைக்காதே,! 

                                 பிள்ளைகள் பெறுவதும்
                                 பேணிகாப்பதும்பெண்கள் ,
                                 தொல்லைகள் வந்தாலும்
                                 துயரமில்லாமல் ,
                                 தொண்டுகள் செய்வதும்
                                 பெண்கள் ,!

                                 சேற்றில் இறங்கி
                                 நாற்று  நடுகின்ற
                                ஆற்றல் மிகுந்த பெண்கள் ,
                                அவள் ஆற்றும் கடமைக்கு
                                அளவேயில்லை
                                போற்றவேண்டிய
                                 நமது பெண்கள்.!

                   பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு .
                                  (29-07-2014)                              
















Monday, 28 July 2014

                                          "
                                                                " சுனாமி  சீற்றம் "                                                                                                            
                                 
                                                பட்டிகுடிக்காடு ஆர்.கோவிந்தராசு

                                  உலகம் போகிற போக்கைப் பார்த்தால்
                                  உள்ளம் நடுங்குதடா ,

                                  ஒவ்வொரு பொருளின் விலையைக்கேட்டால்
                                  உச்சந்தலையே வெடிக்குதடா ,

                                  தக்காளியும் கிலோ நூற்றி இருபது
                                  தரமற்ற காய் கறியும் நூரை தாண்டுது
.
                                  எக்காலமும் ஏறாத  விலைவாசி
                                  இக்காலம் விற்குதடா  அண்ணாச்சி

                                  நாற்காலியில் உள்ள நமது  அரசாங்கம்
                                  நல்ல,நல்ல திட்டங்கள் வகுக்குது ,

                                  நமது நாட்டில் விலைவாசி ஏற்றமோ
                                  கொடிக்கட்டி   வானத்தை  தொடுகிறது.

                                 பெட்ரோலை போல தண்ணீரும் விற்க்குது
                                 பெரிய மலையை தாண்டி தங்கம் விலை ஏறுது ,

                                 விவசாய  நிலமெல்லாம் வீடுகள்  ஆகுது.
                                 வேலையில்லா பட்டதாரி  மூட்டைகள்  தூக்குது ,

                                 விலைவாசிகளும் கட்டுபடியாகல
                                 வீட்டுச்சுமைகளைத்  தாங்கமுடியல.
,
                                 மழையும்,தூரல ,மகசூலும்,பெருகல
                                 மனு நீதியும்  உலகத்தில் சரியில்ல .-இங்கே

                                 உழைக்கவும்,ஆளில்ல ,ஒற்றுமை இங்கில்ல
                                ஒட்டு மொத்தத்தில் இயற்கையால் பெருந்தொல்லை.
                             
                                பாட்டாளி மக்களுள்ளம்   பதறி புலம்புது
                                பணம்,காசு இல்லாமல்  வீட்டுக்குள்ளே ஏங்குது

                                நாட்டையாளுகின்ற  நமது அரசாங்கம்
                                நன்மைகளைச்  பல  செய்தாலும் ,
                             
                                நடக்கும் இவ்வாண்டில் விலைவாசி ஏற்றம்
                               கடலில் தோன்றுகின்ற சுனாமி  சீற்றம்.!

                                எங்கிருந்து வந்ததோ விலைவாசி  ஏற்றம்,
                                ஏழை ,நடுத்தர மக்களுக்கு தடுமாற்றம்,
                           
                                இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடில்                                                                           சந்திக்க நேரிடும் மக்கள் பெரும் ஏமாற்றம். .!
                               
                               
                                         பட்டிக்குடிக்காடு  .ஆர். கோவிந்தராசு
.                                                                  (28-07-2014)                                                                            
           நான் நேரில் கண்ட  இந்திய பிரபலங்கள், மற்றும் நட்ச்சத்திரங்கள்.

                                       பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு 

          1) திரு. நீலம்  சஞ்சீவ ரெட்டி  முன்னாள் குடியரசுதலைவர் நெய்வேலியில் 2வது நிலகரி சுரங்க அடிக்கல் நாட்டு விழாவில்.

           2) திரு  நடிகர்திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னாள் தமிழக முதலமைச்சர் நெய்வேலியில் அடிக்கல் நாட்டு விழாவில். 

                          3)திரு  கலைஞர்  மு.கருணாநிதி முன்னாள்தமிழக முதலமைச்சர் விருத்தாசலத்தில் பிரச்சார பொது கூட்டத்தில்,
    
                           4)  திருமதி ,இந்திராகாந்தி அமமையார்  முன்னாள் பிரத மந்திரி, விருத்தாசலத்தில் பொது கூட்டத்தில் ,
                                 
       5)  செல்வி  ஜெ .ஜெயலலிதா  அம்மா  இந்நாள் தமிழகமுதலமைச்சர்.விருத்தாசலம் பொது கூட்டத்தில்.,

                              6) திரு ,ராஜீவ் காந்தி  முன்னாள் பிரதம மந்திரி குஜராத் மாநிலம் சாபர்மதியில், இரயில்வே நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கி பொது கூட்டத்திக்கு செல்லும் பொழுது .

               7) திரு,நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன்          விருத்தாசலத்தில் பொது கூட்டத்தில் ,

                              8)திரு தொல் திருமால் வளவன் ,தலைவர் விடுதலை சிறுத்தை 
  பட்டிக்குடிக்காட்டில் பொது கூட்டத்தில்,

                     9)திரு ,குமரி ஆனந்தன்,முன்னாள் காங்கிரஸ்  தலைவர் ,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்க ஆண்டு விழாவில் ,

                          10)திரு , நடிகர் இளைய தளபதி  விஜய் , சென்னை கோல்டன் பீச்சில் சினிமா சூட்டிங் நடந்த போது சந்தித்து பேசினேன் .அப்போது அவரிடம் சொன்னேன் விஜய் சார் நீங்கள் ஹிந்தி சினிமாவில் நடிக்கலாமே என்றேன் .அதற்க்கு அவர் தந்த பதில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார். 
      
                            11) திரு ,கங்கை அமரன்  இன்னிசை வேந்தர் ,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கம் ஆண்டு விழாவில், அவருடைய இசைக்குழுவினருடன் வந்து கலந்துக்கொண்டு இசை நிகழ்ச்சி நடந்தபோது நான் அவருக்காக எழுதிய பாடல் '"இன்னிசை வேந்தரே "என்ற பாடலின் மூலம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவருடன் போட்டோவும் ,ஆட்டோகிராப்பும் வாங்கி வைத்துள்ளேன் 

                             12) திரு ,சீர்காழி .கோவிந்தராஜன்  சினிமா பின்னணி ,பாடகர்  விருத்தாசலத்தில் பழமலை நாதர் பெரியக்கோயிலில் பக்தி பாடல்கள் பாடிய போது ,
                              
                                 13)திரு, டாக்டர் சீர்காழி  சிவ சிதம்பரம் சினிமா பின்னணி பாடகர்  குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்க ஆண்டு விழாவில்  மேடை கச்சேரியில்   என்னுடைய கைப்பட  எழுதிய பாடல்களில் எவ்வளவோ பாடல்களின் நோட்டை அவரிடம் கொடுத்த போது  திரு சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களாகவே அவருக்கு விருப்பப்பட்ட பாடலை தேர்ந்தெடுத்து ,அவருடைய இன்னிசை குழுவின் இசைக் கலைஞரோடு முதல் முதலாக நான் எழுதிய பாடலை  12-06-2010  அன்று அகமதாபாத் தமிழ் சங்கத்தின்  காங்கரியா திறந்த வெளி இசை அரங்கத்தில் இன்னிசை கலை விழாவில் கலைமாமணி,பத்ம ஸ்ரீ ,டாக்டர்,சீர்காழி சிவ  சிதம்பரம் அவர்களால் பாடப்பட்டு முதல் முதலாக கச்சேரியில் அரங்கேற்றப் பட்ட பாடலான கடன் கொடுத்தான் நெஞ்சம்................என்ற பாடலின் முலமாக அவர்களை நேரில் சந்தித்த பெரும்பாக்கியம் கிடைக்கப்பட்டு  அவர்களால் என்னுடைய இருபது ஆண்டுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் பாடல்களுக்கும் பாராட்டுகளும்,கிடைக்கப்பட்டு ,ஆனந்த மனமகிழ்ச்சியடைந்தேன் என்றால் இதைவிட பெரும் பாக்கியம் ,என்னை அப்பெரும் மக்கள் அரங்கத்தில் அவருடைய இசைமேடையில் அழைத்து இந்த பாடலை எழுதிய  பாடலாசரியர் பட்டிக்குடிகாடு .ஆர்.கோவிந்தராசு  இவர்தான் என்று என்னை கெளரவ படுத்தியதோடு,என்னுடைய ஊர் பெயரையும் புகழ் பரப்பிய  திரு சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் என்னுடைய நெஞ்சிலிருந்து நீங்காத நீல மயில் வாகணத்தில் அமர்ந்திருக்கும் பால முருகனாக என் கண் முன்னே எப்பொழுதும் காட்ச்சியளித்து கொண்டிருக்கும் என் கண்ணால் கண்ட தெய்வம் ஆகும்.

                                என்னை பெற்றெடுத்து ,ஆளாக்கி இந்த உலகத்திற்கு கொண்டுவந்த அம்மா அகிலாண்டத்திர்க்கும்,அப்பா இராமசாமிக்கும்,நான் செய்ய வேண்டிய நன்றியை இதன் மூலம் அடைந்தேன் .என்பதிலும் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.எனவேஎன்னுடையபெற்றோர்கள்,மனைவி கண்ணகி,மகன் ராகுல், மகள்கள் தனலக்க்ஷ்மி ,ராஜலக்ஷ்மி, உற்றார்,உரவினர்களைப்போல என் மனதில் இடம் பிடித்த மாமனிதர் கலைமாமணி பத்ம ஸ்ரீ டாகடர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகும்.

                                               இவரின் தந்தையாகிய கலைமாமணி,பத்மஸ்ரீ ,டாக்டர் சீர்காழி .எஸ்.கோவிந்தராஜன் பாடிய பக்தி பரவசமான  சினமா பின்னணி பாடல்களும்,பக்தி பாடல்களும் , என் இளம் வயதிலிருந்து எப்படி நீங்காமல் நிற்க்கின்றதோ ,அதைப் போலவே நினைவிலிருந்து நீங்காத பிரபலம்  திரு சிவ சிதம்பரம்  ஆகும். .

                                     14)திரு ,நரேஷ் கண்ணோடியா குஜராத் சினமா நடிகர் ,
சாபர்மதியில் பஞ்ச சீல் மருத்துவமனையில்  பார்த்தது,

                                     15) திரு,எம்.ஆர். பன்னீர்செல்வம், முன்னாள் தமிழக அமைச்சர், சிதம்பரத்தில் பாலாஜி - ஷோபா வின் திருமண விழாவில் சந்தித்தது. 

                                                        16) திரு மு.க  .ஸ்டாலின் தமிழக முன்னாள் அமைச்சர்  சென்னை  சென்ட்ரலில் சென்றுக் கொண்டிருக்கும் போது பார்த்தது.

                                                  17) திரு,சாலமன் பாப்பையா  பேராசரியர்,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கத்தில் கல்யாணமாலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது.

                                               18)  திரு இராஜா சிறந்த சொர்ப்பொழிவாளர் ,அகமதாபாத் தமிழ் சங்க கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சந்தித்தது,

                                                      19) திருமதி பாரதி பாஸ்கர் சிறந்த தமிழ் சொர்ப்பொழிவாளர்  குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கம் கல்யாணமாலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது .

                                                      .  20) திரு இளைய ரவிராஜா  இசை அமைப்பாளர்,விருத்தாசலத்தில் பாரதி திருமண விழாவில் சந்தித்த போது .

                                                             21) திரு  மோகன் (வெங்கடேஷ் ) கல்யாண மாலை தொகுப்பாளர்  குஜராத்தில் அகமதாபாத்தில் கல்யாணமாலை  நிகழ்ச்சிக்கு வந்தபோது சந்தித்தது.

                                                                  22)திரு ,அமிதாப் பச்சன்   ஹிந்தி சூப்பர் ஸ்டார் 
பம்பாயில் கோரேகாவ் சினிமா ஷூட்டிங்க் நடந்தபோது என் குடும்பத்தோடு சந்தித்தது.

                                                                     23) திரு,அணில் கபூர்  ஹிந்தி நடிகர்  பம்பையில் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது . 

                                                                  24) திரு,.சஞ்சய்தத் பம்பாய் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது.

                                                                 25)திரு திரு அனுகபூர்  ஹிந்தி நடிகர் பம்பாய் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது.

                                 இப்படி மேலே உள்ள பிரபல முன்னணி நட்ச்சத்திரங்களை ஒரு சிலரை இரண்டு,மூன்று முறை கூட சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது.ஒரு சிலரிடம் போட்டோவும், எடுத்து வைத்துள்ளேன் ,ஆட்டோகிராப்பும்,வாங்கியுள்ளேன்.எனது முன்னோர்கள் செய்த பெரும் பாக்கியம்  பல பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தமைக்கு நான் ஆண்டவனுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். 

                                           பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு 
                                        சாபர்மதி,அகமதாபாத்,குஜராத் மாநிலம் 
                                                                   ( 27-07-2014).

குறிப்பு -மேலே எழுதியுள்ளது அனைத்தும் உண்மை .



Monday, 21 July 2014

" பாளையக்காரர் வரலாறு " ( Palayakarar Varalaru )

                                பட்டிக் குடிக்காடு ஆர் கோவிந்தராசு
                   
                                    (1)           "  பாளையக்காரர் வரலாறு "மற்றும் வாழ்க்கை வரலாறு "

                         இந்தியாவில் பாளையக்காரர்கள் வாழ்ந்த காலங்கள் கி.பி.1600-லிருந்து கி.பி 1852 க்கு இடைப்பட்டகாலங்களில் ஆட்ச்சிபுரிந்ததாகவும்மேலும் வரலாற்று வட இந்தியாவை முகலாயர்களும்,தென் இந்தியாவை பாளையக்காரர்கள் ஆட்ச்சி புரிந்ததாகவும் வரலாறு  கூறுகின்றது.

                                      இதன் வரைப்படம் பூகோள ரீதியாக 1700கி பி யில் இந்திய நாட்டின் ஆட்ச்சியாளர்கள்  பற்றி தெரவிக்கப்பட்டுள்ளது.அப்போது  நமது இந்திய நாடு பல ராஜ்யங்களாக இல்லாமல் வட இந்தியா,தென்இந்தியா,
கிழக்கிந்தியா,மேற்கிந்தியா,என திசைகள் வாரியாகவும்,மொழி வாரியாகவும்
பட்டனங்களாகவும் ,பிரிக்கப்பட்டு ஆட்ச்சி நடத்தப்பட்டுள்ளது
.
                                           நமது இந்திய வரலாற்றை நன்கு அறிந்த மேதைகளும்,
அறிஞசர்களும்.சிறப்புமிக்க புவியியல் வல்லுனர்களும்,ஏராளமானோர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நான் எழுதி யுள்ளது நான் அடுத்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டவையும்,அனுபவ ரீதியாகவும் தெரிந்தவரையில் இதில் சமர்ப்பித்துள்ளேன்.குறைகள் இருப்பின் பகிர்ந்துக்கொள்ளவும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.

                                  உலகத்தில் எந்த தேசத்திலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நமது இந்திய புவியியல் வரலாற்று க்கு மிகப்பெரும் தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் நமது இந்திய நாட்டை அரசாட்சி புரிந்தவர்கள் ராஜாக்கள் ஆவார்கள் .அவர்களையே ஒவ்வொரு ராஜ்யங்களிலும்,பல இடங்களில் ராஜாக்கள் என்றும்,பாளையக்காரர் என்றும்,அழைக்கப்பட்டார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் சில இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.அதாவது பாலிகர், என்றும் அழைக்கப்பட்டார்கள்.

                                        மேலும்,பாளையக்காரர்கள் பெயர்கள் பின்வருமாறு காணலாம் .      1) தீரன் சின்னமலை,  2)நாகலாபுரம் எரியப்பா நாயக்கா,3)காதல்குடி,   4)சிவகிரி வன்னியர் படையாச்சி,5)அழகாபுரி வன்னியர் படையாச்சி, 6)எழாயிராம் பன்னல் வன்னியர் படையாச்சி,7)உடையார்பாளையம்  சமஸ்தான வன்னியர் படையாச்சி, 8)அரியலூர் மழவராயர், 9)பிச்சாவரம் ஜமிந்தார், 10)மதகரி நாயக்கா, 11)ராஜா வெங்கடப்பா  நாயக்கா,12)உய்யலவாடா  நரசிம்மா ரெட்டி, 13)சப்தூர் நாகயசாமி கமைய நாயக்கர்  ,என்று பாளையக்காரர்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகின்றது. இதில் நமது தமிழ் நாட்டை ஆட்ச்சிப்புரிந்தவர்கள்
1)புலித்தேவர், 2)வீரபாண்டியக் கட்டப்பொம்மன்,   3)தீரன் சின்னமலை,
என்பவர்கள் ஆட்ச்சி புரிந்துள்ளார்கள்.  இவர்களுடைய ஆட்ச்சிக்காலங்கள்
கி.பி .1600 லிருந்து 1852வரை  தங்கள் பிரதான சர்வாதிகார ஆட்ச்சியாளர்களாக
ஆண்டு வந்துள்ளார்கள் என்று வரலாறு .
                                                 நமது நாட்டின் பாளையக்காரர்கள் எப்படியெல்லாம் ஆட்ச்சிப்புரிந்தார்கள்  பிறகு அவர்கள் ஆங்கிலேயர்களால் எப்படி எல்லாம் துன்புறுத்தப் பட்டார்கள்,நமது நாட்டையும்,நாட்டு மக்களையும் ,எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கி கடும்கொடுமைகளை சுமக்கச்செய்தார்கள்  என்பதையும், வரலாற்று சுவடுகளிலும்,இந்திய வரலாற்று சான்றுகள் வாயிலாகவும், காணமுடிகின்றது.
                                                   மேலும்,இந்திய சினிமா துரையின் மூலமாகவும்,
நடிகர் திலகம் ,செவ்வாலியர் விருதுப்பெற்ற சிவாஜி கணேசன்  நடித்துள்ள
வீரப்பாண்டியக் கட்டப்பொம்மன் படத்தின் மூலமாகவும்,நமது நாட்டில் பாளையக்காரர்கள்  எப்படி வாழ்ந்தார்கள் என்றும்,ஆங்கிலேயன் இடத்தில்
நமது நாட்டு எட்டையர்கள் எப்படி சகுனிகளாக  நடந்துக்கொண்டார்கள் என்பதையும், ,வீரபாண்டிய கட்டப்பொம்மன்,சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்கள்  போல இன்னும் எவ்வளவோ பாளையக்காரர்கள்  இந்தியாவில் வாழ்ந்து உயிர் நீத்தார்கள் என்பதையும் ,   மக்கள் திலகம் பாரத் ரத்னா விருது பெற்ற  மாண்புமிகு முன்னால்  தமிழக முதலமைச்சருமான திரு எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்துள்ள சினிமா படங்களின் மூலமாகவும், நமது இந்திய நாட்டின் பாளையக்காரர்களின் வரலாற்றுச்சிறப்புகளை தெரிந்துக் கொள்ள உதவுகின்றது.
                                      துதோட்டியால்ஆகாததுதொண்டைமான்ஆனாலும்  ஆகாது என்பார்கள். தொண்டைமான் என்றால் அரசன் என்று பொருளாகும் அந்த தொண்டைமானே  தொரையாகும். . அந்த காலத்தில் பாலையக்காரரைத்தான் தொரை என்றும் அழைக்கப்பட்டார்கள்
                                        அந்த பாளையக்காரர் தான் சுற்று வட்டார    கிராமங்களுக்கும் பஞ்சாயத்து தலைவராகவும் செயல் பட்டு வந்தார்கள். அவர் மக்களிடம் நேரடியாகச்சென்று வரி வசூல் செய்யமுடியாத விஷயமல்லவா ?ஆகவே அவருக்கு கீழ் சில பணியாளர்களை நியமித்தார்கள். அவர்களின் மூலமாகத்தான் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது.அந்த பணியாளர்கள் பெயர்தான்  மணியம், கணக்கன்,தோட்டி ,தலையாரி,கர்ணம்,என்பவர்கள் நியமிக்க பட்டிரிருந்தார்கள் . இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும்   இந்த கிராம அதிகாரிகளை கொண்டு தான் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது .
                                              பிருகு பஞ்சாயத்து தலைவராட்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசாங்கம் .பின்னர்  அரசாங்கம் படித்த பட்டத்தாரிகளை நியமித்து
ஊராட்ச்சி மன்ற தலைவர்கள் ,கிராம நிர்வாக அதிகாரி ,கிராம  பாது காவலர், நகராட்ச்சி  தலைவர் ,கவுன்சிலர்கள், போன்ற பதவிகள் அரசாங்க பதவிகள் கொடுக்கப்பட்டது.  இந்த பதவிகளுக்கு  மேல் உயர்ந்த பதவி வகிக்கும் உயர் அதிகாரிகளாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்,மாவட்ட ஆட்ச்சியாளர்கள்,ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்டாட்ச்சியாளர்கள்,ரெவன்யு அதிகாரிகள்,கிராமக நிர்வாக அதிகாரிகள் போன்ற அதிகாரிகளை அரசாங்கம் மூலமாக நியமிக்கப் பட்டு ,கிராம நிர்வாக வளர்ச்சிக்கும் ,கல்வி வளர்ச்சிக்கும்,முன்னுரிமைகள் வழங்கப்பட்டு மக்கள் நலன் காக்கும் நமது அரசாங்கம் விவசாயத்துறைக்கும்,நல்லவழி வகை செய்து மக்களின் முன்னேற்றப் பாதையில்சென்று கொண்டு இருக்கும் நமது அரசாங்கம்  தென்னிந்திய பாளையக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகத்திற்கு  எடுத்து காட்டியது போல  எங்கள் ஊர் கடலூர் மாவட்டம்,(பழைய தென்னாற்காடு மாவட்டம்,)
                                                                                      விருத்தாசலம் தாலுக்காவைச் சேர்ந்த பாளையக்காரர்  எம்.பரூர்   வீரசேகரமுத்துக்கிருஷ்ண
பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு ஜமிந்தாருடைய  வாழ்க்கை வரலாற்றை நமது அரசாங்கம் இன்று வரையிலும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.
                                                  இந்த பாளையக்காரரின் வாரிசுகளான திரு பொன்னம்பலம் அவர்களின் வாரிசுகளான பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,இன்றும் மு.பரூரில் வாழ்ந்துக் கொண்டும் இருக்கின்றார்கள் என்பதும் முற்றிலும் உண்மை. உயர்திரு பொன்னம்பலம் அவர்கள் கடந்த  25 ஆண்டுகளுக்கு முன் உயிர் நீத்தார்கள். ஆனால் அவர்களுடைய மனைவிகள் (இரண்டுபேர்கள் )மற்றும் மகன்களான வேலுதுரை ,அவருக்கு பின் தம்பிகள், மற்றும் மகள்கள் பிரேமா ,மற்றும் தங்கைகளும்,இப்போதும் பருரில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் உண்மை.
                                                முகாசாபருரை தலைமை இடமாகக்கொண்டு சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் திரு பொன்னம்பலம் அவர்கள்தான் ஆட்ச்சி புரிந்து வந்தார்கள் என்பதும் உண்மையாகும்.அதிக கிராமங்களை கொண்ட சிற்றுர்கள் ஒன்றுபட்டு இருந்தால் அந்த பஞ்சாயத்துக்கு அந்த காலத்தில் மதுரா என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக இன்றும் மதுராவின் தலையெழுத்தை  எம்.பரூர் , எம்.புதூர் ,எம்.பட்டி,எம்.பட்டிகுடிக்காடு என்றும்
பெயர்கள் ஆதாரமாக உள்ளது.

                                         (2)    "மதுரா என்பதின் பொருள்"

 இந்தியாவில் பல அர்த்தங்களில் பல ஊர்களில் ,மதுரா என்று புழக்கத்தில் இருந்து வருகின்றது. 1)மதுரா என்றால் ​ -கிராம பஞ்சாயத்துகளுக்கு மதுரா என்றும்,(2)அழகுக்கு -மதுரா(ம் )என்றும்,(3)பெண்களுக்கு -பெயர்கள் மதுரம் என்றும்,(4)கிருஷ்ணன் பிறந்த இடத்திற்கும் -மதுரா என்றும்,வெவ்வேறு அர்த்தங்களில் பேசப் படுகின்றது  .மேலும் ,தேன் என்றால் இந்தியில் மது
என்றும் பொருள் உள்ளது .எனவே மது,மாது ,இரண்டுமே இனிமையை க்
குறிக்கின்றது .ஆனால் தமிழகத்தில் மட்டும் மது என்றால் போதை பொருள் என்று மற்றொறு அர்த்தத்தில் விளங்குகின்றது,
                                                        .
                               (3)  "  மு.பட்டி,-மற்றும் மு.பட்டிக்குடிக்காட்டின் சிறப்பம்சங்கள் "    
                                      இங்கே முன்பு அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளாக காணப்பட்டது.காடுகளுக்கு மத்தியில் வீடுகள் அமைத்து மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.இங்கே குடித்தண்ணிருக்கு போதிய வசதிகள் இல்லாமல்
மக்கள் அவதிக்குட்பட்டிருந்தார்கள் .கிணறுகள் தோண்ட படாத காலத்தில்
ஆறுகளிலும்,குளங்களிலும்,ஏரிகளிலும்.தண்ணிர் எடுத்து வந்து அருந்தினார்கள்.என்ற காலங்கள் மறைந்து ,மண் சுவற்றிலான  கூரை  வீடுகள் அமைத்து மக்கள் அப்பொழுது வாழ்ந்துவந்தார்கள் என்பது முற்றிலும் உண்மை.
                       அந்த புராண கால கட்டங்கள் முற்றிலும் மாறுபட்டு இதிகாசம் படைக்கும் கிராமங்களாகி  எங்கள் ஊர் மண்ணின் மகத்துவத்தால்  தண்ணீர் வளம் பெருகி ஆழ் கிணறுகள் தோண்டப்பட்டும்,எரிகள்  நீர் பாசனத்தாலும்,
விவசாயங்கள் பெருகியும்,மகசூல்கள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும்,     மர  வளங்கள், அனைத்து வித மரங்களும்,அந்த மரங்களின் கனி வகைகளும்,
அதாவது,மா,பலா,வாழை,முந்தரி,புளி,ஆரஞ்ச்,மாதுளை,கொய்யா,எலுமிச்சை,
மரக்கனிகளும், செடி,கொடிகளின் காட்டு கனிகளான  களாப்பழம்,நோனாப்பழம்,ஆயிஞ்சம்பழம்,சிற்றீச்சம் பழம்,பேரிச்சம்பழம்,
நாவல்பழம்,போன்ற பழவகைகளும்,தானிய வகைகளான ,நெல்,கம்பு,சோளம்,வரகு,கேழ்வரகு,சாமை தினை ,போன்ற தானியங்களும்,
பயிர்வகைகளான  பச்சைபயிர்,தட்டைபயிர்,எள்ளு ,கொள்ளு,துவரை,அவரை,
மணிலபயிர் (வேர்கடலை)உளுந்து ,விளைந்து களம் குவியும்.
                                   பச்சை காய் கறிகள்  கத்தரி,வெண்டை,பவைகாய்,கோவைக்காய்,பரங்கிகாய்,பூசனிக்காய் பீர்க்கங்காய் சுரைக்காய்,மிளகாய்,தக்காளிப்பழம் முள்ளங்கி ,  கிழங்கு வகையில் வள்ளிக்கிழங்கு,மரவள்ளிக்கிழங்கு,கருணைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு  சேனை க்கிழங்கு,,போன்றவைகளும்,
                                             கீரை வகைககளில்  நாட்டு கீரைகள்  , தும்பை,பண்ணை,,
பசலை,கோழி பசலை,ஊசிப்பண்ணை,சாட்டரனை,அரைக்கீரை,பாலக்கீரை
,தண்டுக்கீரை புளிச்சைக்கீரை  போன்ற கீரைவகைகலும்,
                                                  பூக்கள் வகையில்   ரோஜா,மல்லிகை,முல்லை,அடுக்கு மல்லிகை,குண்டுமல்லிகை,வாடாமலர்,
கனகாம்பரம்,சாமந்தி,துளுக்குசாமந்தி,அரும்பு,பொன்னரும்புகாட்டுமல்லிகை
போன்ற பூக்கள் வகைகளும்,
                                                   மர ம்  வகைகளில் =
விலை உயர்ந்த  மரங்களான தேக்குமரம்  ,பலாமரம்,பூவரசமரம்,கருங்காலி மரம் ,பொரிச்சிமரம் ,வேப்பமரம்,புங்கமரம்,நொனாமரம் ,மற்றும்,வாகைமரம்,
துரிஞ்சிமரம்,வேலமரம்,கருவைமரம்,அயிஞ்சிமரம்,கருவேலமரம்,ஆலமரம்,
அரசமரம்,வன்னிமரம்,பனைமரம்,தென்னைமரம்,ஈச்சம்மரம்,பேரீச்சம்மரம்,
முந்தரிமரம்,மாமரம், வாழைமரம்,கொய்யாமரம்,ஆரஞ் மரம் நாரத்தமரம்,
சாத்துக்குடி மரம்,எழுமிச்சம்மரம், இலுப்பைமரம்,கொடுக்காபுளி மரம் புளியமரம்,போன்ற மரவகைகளும்,
                                                      முள் வகைகளில் =
காரைமுள்,கிளுவைமுள்,கருவைமுள்,காட்டு கருவைமுள் (40 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது )அதற்குமுன் காட்டுகருவை நமது நாட்டிலேயே ஒரு மரம்கூட கிடையாது என்பது உண்மை.இவைகள் வேலிக்காகபயன்படுத்தப்பட்டவைகள்ஆகும். மற்றும்,கள்ளி,சதுரக்கள்ளி,இலைக்கள்ளி,சப்பாத்திக்கள்ளி,ஆருமுகக்கள்ளி,கொடிக்கள்ளி,உருளைக்கள்ளி,   காரை, பிரண்டை,முன்னை,முஸ் ட்டை,போன்றவைகளும்,

                                                             மண்வகைகளில் -
எட்டு திசைகளுக்கும் வெவ்வேறு நிறத்தில் மண்ணும்,வடக்கில் வண்டல்மண்ணும் ,தெற்கில் வெண் மணலும் ,கிழக்கில் செம்மண்ணும்,மேற்கில் உளைமன்னும்,(சேற்று மண் )தென்மேற்கில் ஈரங்காத்த மணலும்,தென்கிழக்கில் கரிசல் மண்ணும்,வடகிழக்கில் வண்டல்கரிசல் மண்ணும்,வடமேற்கில் சுண்ணாம்பு மண்ணும் ,துண்டான் காட்டில் உப்புமண்ணும் போன்றவைகள் மண்ணின் அற்ப்புதமான மகத்துவங்களாகும்
                                               அதிகமாக கிடைக்கும் பழங்கள் -
மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்,முந்தரிப்பழம்,மற்றும் கரும்பு ,சாகுபடியும் இங்கே அதிகமாகவே பயிரிடப்படுகிறது. கரும்பு சாகுபடி அதிகம் செய்வதால் இங்கே நாட்டு வெல்லம் உருவாக்கப்பட்டு வந்தது.இப்போது அந்த முறைகள் மாற்றமாகி பயிரிடப்படும் கரும்புகள் அனைத்தும் சர்க்கரை ஆலைகளுக்குஅனுப்பப்படுகின்றது.
                                              பாளையக்காரர் ஆட்ச்சி புரிந்த காலங்களில் விவசாயம் மேலோங்கி சுற்று வட்டாரங்களில் தானிங்கள் களம் குவிந்ததாகவும்,மக்கள் அனைவரும்நீதியும்,நேர்மையாகவும்,வாழ்ந்ததாகவும்,முன்னோர்கள் கூருகின்றார்கள்   . அதே நிலங்கள் இப்போதும் இருந்தாலும்விவசாயங்களின்
 மவுசுகள் குறைந்து  புதிய பாதையில்  மக்களின் மனமாற்றங்கள் முற்றிலும்
வேறுப்பட்டு காணப்படுகின்றது. இப்போது விவசாயம் செய்பவர்கள்என்றால்   குறைவாக நினைக்கும் காலம் நடந்து வருகின்றது என்பது தான் முற்றிலும் உண்மை. எனவே காலத்திற்கேற்ப  மாற்றங்கள் தேவை என்பதும் உண்மை.!                             
இது நமது மக்கள் அனைவரும் மிக முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய
விஷயம்.நமது மாவட்டம் கடலூர்  கோடு  நம்பர்  3(மூன்று )நமது வட்டம் விருத்தாசலம் பிளாக் நம்பர்  10 (பத்து ) வில்லேஜ் நம்பர்  மு..பரூர் நம்பர் 22, மு.பட்டி நம்பர் 23 என்பவை ஆகும். மேலும்,நமது விருத்தாசலம் கீழ் உள்ள மொத்தக்கிராமங்கள்  51 ஆகும்.  முதல் கிராமமாக ஆலிச்சிக்குடி வேட்டக்குடி 51 ஆவது கிராமமாகும்.ஆக நமது விருத்தாசலம்வட்டத்தின் கட்டு பாட்டில் மொத்தம் 51 கிராமங்கள் உள்ளது. இதில் நமது ஊர் மு.பரூர்  22ஆம் இடத்திலும்,மு.பட்டி  23ஆம் இடத்திலும் இருக்கின்றது  .என்பதை அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் இது  எனது அன்பான வேண்டுகோளாகும்.
                                                        இவன் 
                                பட்டிக்குடிக்காடு ஆர்,கோவிந்தராசு
                           சாபர்மதி,அகமதாபாத்,குஜராத்மாநிலம்
                                                     (21-07-2014)
குறிப்பு -மேலே எழுதியுள்ளவைகள் அனைத்தும் நான் பிறரிடம் கேட்டுத்தெ ரிந்தவையும்,எனது அனுபவ ரீதியாகவும்,எழுதியுள்ளேன் .இன்னும் எனக்குத்தெரியாதவைகள் எவ்வளவோ இருக்கும்.எனவே நன்கு
விபரம் தெரிந்தவர்கள் இந்த தொலை பேசியில் (09879042958 ) தொடர்புக்கொள்ள வேண்டிக்கொள்கின்றேன்.
                                                   
                                                            நன்றி வணக்கம்.
                                                                       

Tuesday, 8 July 2014

மு. பட்டிக்குடிக்காடு " பெயராக்கம் பற்றிய விரிவாக்கம்"


                                        பட்டிக்குடிக்காடு இரா .கோவிந்தராசு


                                         மதுரா மு.பட்டி, மு. பட்டிக்குடிக்காடு
                                         "  பெயராக்கம் பற்றிய விரிவாக்கம்"

                                அன்பார்ந்த இனிய தமிழ் நெஞ்சங்களுக்கும்,எனது சொந்த ஊர் மக்கள் அனைவருக்கும் ,எனது அன்பு கலந்த முதல் வணக்கம்.!

                                  எங்கள் ஊர் "மு.பட்டி," "மு .பட்டிக்குடிக்காடு  பெயராக்கம் "  பற்றிய விரிவாக்கம்" இணைய தளத்தின் முலம் இந்த உலகத்திற்கு தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
                    
                         நாம் வாழும்  இந்த திவ்விய பிரபஞ்சத்தில் ஜன்மம் எடுத்ததற்கு  ஒவ்வொருமானிடரும்   தம்மால்முடிந்த ஏதாவது  ஒருசெயல்புரியவேண்டும்                               
                               இங்கே   என்னால் முடிந்த ஒரு சிறிய  செயலை நாம் வாழும் இந்த உலகத்தில் இணைய தளம் முலம் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன் .

                         அதுதான் நான்பிறந்த புண்ணிய பூமியான  மு பட்டிக்குடிக்காட்டின் பெயராக்கம் பற்றிய விரிவாக்கம்  இதோ உங்கள் முன்னிலையில் நான் கேட்டரிந்தவையும்,எனதுஅனுபவரீதியாலும்நான்அறிந்தவற்றைஇங்கே சமர்ப்பிக்கின்றேன் .
                              
                                உலக வரைப்படத்தில் நாம் வாழு ம்  நமது நாட்டையும்,நமது ஊரையும் ,நமது வீட்டையும்,அறிவியல் வளர்ச்சியின் மூலமாக  இணையதளம் மூலமாக வும்  கண்டு மகிழ்கின்றோம்  இதற்க்கெல்லாம்  முக்கிய காரணம் அறிவியல் தொழில் நுட்ப்ப வளர்ச்சியே காரணமாகும்,
                              தொழில் நுட்ப்ப வளர்ச்சியடையவில்லை என்றால்  நாம் அனைவரும்கிணற்றுக்குள்தவளைப்போன்றேசுழன்றே வந்துக்கொண்டிருப்போம். இவ்வுலகைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு கிட்டிருக்காது  என்பது முற்றிலும் உண்மையாகும்.
                                          
                                     எங்கள் ஊர் மதுரா பட்டிக்குடிகாடு என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்வி அனைவரிடமும் ஒரு குழப்பங்கள் வரலாம் .அதற்க்கு விடையாகநான்இதன்மூலம்எனக்குத்தெரிந்தவற்றையும்,முன்னோர்களிடம்  கே ட்டுத்தெரிந்தவற்றை யும் இங்கே எழுத கடமைப் பட்டுள்ளேன்.       
                                     மதுரா  பட்டி என்பது  உலக வரைப்படத்தில் ஏழு பெரிய கண்டங்களில் ஒன்றான நமது ஆசியாக்கண்டத்தில் இந்திய தேசத்தில்,தமிழ் நாட்டில் பழைய தென்னாற்காடு மாவட்டம் ,இப்போதைய மாவட்டமாக இருக்கும் கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் தாலூக்காவில் முகாசாப்பருரை தலைமை இடமாகக்கொண்டு மதுரா மு.பட்டியும் ,மதுரா.மு.பட்டிக்குடிகாடும,
இருக்கின்றது எங்கள் சுற்று வட்டார ஊர்களை அரசாட்ச்சி செய்து வந்தவர் தான் மகாராய ராய ஸ்ரீ , மேன்மை தங்கிய இராஜாதி,இராஜா,,உயர்திரு வீர சேகரமுத்துக்கிருஷ்ண,பொன்னம்பலகச்சராவ்        பாளையப்பட்டு,  ஜமிந்தார்,
துரை அவர்களால் ,எங்கள் சுற்றுவட்டார ஊர்களை அரசாட்ச்சி செய்து மக்களை பாதுகாத்து வந்த ஊர்களில் ஒன்றான மதுரா மு. பட்டி என்றஎங்கள்  ஊரான ,
                                             இந்த மதுரா மு.பட்டியில் இணைந்து இருப்பதுதான் மதுரா மு.பட்டிக்குடிக்காடு ஆகும். இந்த இரண்டுமே ஒரே ஊர்தான் என்றாலும் மு.பட்டி,என்றும், மு.பட்டிக்குடிக்காடு என்றும் எப்படி பெயர்மாற்றம் வந்துள்ளது என்ற கேள்வி  எழுந்தபோது கிடைத்த பதிகள் இதோ
                                                           மு.பட்டி மற்றும் மு.பட்டிக்குடிக்காடு என்ற பெயர் உருவான விபரம் .அதன் பொருள்  இப்படித்தான் உருவாகி இருக்குமோ என்ற சிந்தனை யில்  தோன்றிய வினாவிற்கு கிடைத்த விடை இதோ
                                                       .முதலில் பட்டி என்பதின் பொருள் காணலாம்(1)
பட்டி என்ற சொல்லுக்கு இந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும்,பல காரணங்கள் கூருகின்ரார்கள்.பட்டி என்றால் புராண இதிகாச காலங்களிலிருந்தே பார்ப்போமானால் இந்தியாவின் மத்தியபிரதேசமான உஜ்ஜயின் நகரத்தை ஆண்ட இராஜா விக்ரமாதித்தன் அரசவையில் முதல் ஆலோசகராக விளங்கியவரின் பெயர் பட்டி என்று அழைக்கப்பட்டார்.அந்த மகத்தான அறிவு பெற்ற ஆலோசகர்தான் இராஜா விக்கிரமாதித்தனின் அரசவையில் புகழாக விளங்கியவர் பெயர் பட்டி ஆகும்..அந்த பட்டி என்ற மகா மந்திரியின் ஆலோசனப்படித்தான் விக்கிரமாத்திதனின் ஆட்ச்சி நடந்தது.
                                     (2) நமது இந்திய தேசத்திலும் ,நமது தாய் தமிழ் நாட்டில் எத்தனையோ ஊர்களில்  தங்களின் ஊர்களுக்குப்பின்னால் பட்டி என்ற பெயர் இடம்பெறுகின்றது.தமிழ் நாட்டில் மட்டும் பதினெட்டு பட்டிகள் உள்ளது என்றும் சொல்லுவார்கள்  அதற்க்கெல்லாம் தகுந்த மூலக்காரனங்க்கள் இருக்கும் என்பதும் உண்மை. இந்த வரலாற்று சிறப்புமிக்க பெயரான பட்டிக்கு எங்கள் ஊரும் பட்டி என்றபெயர்  பெற்றமைக்கு நமது கிராம மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமல்லவா .பட்டிஎன்றால் அறிவாளி,புத்திக் கூர்மையுள்ளவர் என்று கூட சொல்லலாம்..அப்படிப்பட்ட அறிவில் சிறந்தவர்களையே அரசர் தனது அரண்மனையில் அரச தர்பாரில் பட்டி எனும் மந்திரியை நியமிக்கின்றார் . அந்த பட்டி எனும் மகா மந்திரியாக விளங்க்கியவர் தான் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் இராஜா விக்ரமாதித்தன் அரசவையில் தலைமை மந்திரியாக பட்டி என்பவரை நியமித்திருந்தார் .அவர்களைப்போலவே எங்கள்ஊரைச்சேர்ந்தமு.பாரூர் பாளையக்காரருக்கு ஆலோசக  மகாமத்திரிகளாக  வாழ்ந்துவந்த ஊர்தான் பட்டி என்ற எங்கள் கிராமமாகும். எங்கள் ஊருக்கு பட்டி என்றும்,பட்டிக்குடிக்காடு என்றும்,பெயர் சுட்டியவர் யார் ? அவர் எப்படி வாழ்ந்த அரச பரம்பரை குடிம்பத்தை சேர்ந்தவர்கள்,என்பதை இங்கே காணலாம்.
                              (3) பட்டி,என்ற சொல்லுக்கு ,அர்த்தம் அறிவில் மிகச் சிறந்த மேதைகளும்,கவிப்புலவர்களும், இலக்கணஇலக்கிய,வல்லுனர்களும்,நிறைந்த மாமன்றம் என்றும் பொருளாகும்.ஆகையால் அக்காலத்திலிருந்தே ஒரு அரசவையில் மன்னனாக விளங்க்குபவர் தனக்கு சாதகமான புத்திக் கூர்மையுள்ள ,அறிவில் சிறந்த பட்டி எனும் மந்திரியாக நியமிக்கபடுகின்றார்.என்பது குறிப்பிடத்தக்கது.
                                          ஆகவே  அன்றும்,இன்றும், வேறெந்த தேசத்திலும்,மாநிலத்திலும்,இல்லாத தனிச்சிறப்பு நமது தாய் மண்ணுக்கும்,நமது தமிழ் மொழிக்கும் உள்ள மிகச்சிறந்த சிறப்பம்சங்கள் தான் பட்டி  மன்றங்கள் உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.
                                                      (4)அன்றும்,இன்றும்,நகரங்களிலும்,கிராமங்களிலும்  முற்றும்கற்றுணர்ந்த அறிவியல் சிறந்தவர்கள்,ஒன்று கூடி விவாதமேடைகள் அமைத்து தங்களுடைய திறமைகளைவெளிப்படுத்திவெற்றித் தோல்விகளை நியமிக்கும்மாமன்றத்திற்கு,பட்டிமன்றம்என்றும் ,இன்றும் வானொலியிலும்,தொலைக்கட்ச்சியிலும்,பட்டிமன்றங்கள் மிகச் சிறப்பாக மக்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.ஆகவே எங்கள் ஊர் சுற்று வட்டார கிராமங்களை இராஜா அரசாட்ச்சிகள்செய்துவந்தாலும்,அவருக்குஆலோசகர்களாகவிளங்கியவர்கள் எங்கள் ஊர் பட்டி கிராம நிர்வாகிகளாவார்கள்.என்பதில் பெருமிதம் அடைகின்றோம்.
                                           (5)முன்பு கிராமபுரங்களில் கால் நடைகளை இரவு நேரங்களில் ஒரு இடத்தில் தங்க வைப்பதர்க்குள்ள இடத்திற்கும் பட்டி என்பார்கள்.மேலும் நமது அண்டை நாடான கேரளாவில் வேறுவிதமாக அழைக்கின்றார்கள்.மற்ற பிற மொழி பேசும் மாநிலங்களில் பலவித அர்த்த்ட்ங்க்களில் பட்டி என்ற சொல்லில் பெயரை உபயோகப்ப்டுத்துகின்ரார்கள்.
                                           இராஜா விக்கிரமாதித்தன் போலவே எங்கள் விருத்தாசலம் வட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களை (பேரூர் ) பெரியப்பரூர்  என்று அழைக்கப்படும் ஆங்கிலேயனால் பெயர் மாற்றப்பட்ட முகாசாப்பரூர் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ,எங்கள் ஊரின் இராஜாவாக விளங்கியவர் மகாராய ராய ஸ்ரீ மகா கணம்மேன்மை தங்கிய ,உயர்திரு வீர சேகர ,முத்துக்கிக்ருஷ்ண,பொன்னம்பல,கச்சிராவ் பாளையப்பட்டு,ஜமிந்தார் அவர்களின் அரச தர்பாரில் மணியம் பார்த்தவர்களும்,அரசருடைய முக்கிய ஆலோசகர்களாக விளங்கியவர்களும்,அரசருடைய நிப்புலங்க்களை ,கண்காணித்துவந்தவர்களும்,அரசருக்குஉண்மையானநட்ப்புரவுக்கொண்ட நெருங்கிய  மாமனிதர்களாக விளங்கிய அதிகார மந்திரி (பட்டி)யாக வாழ்ந்த வர்களின் அதிகாரி பட்டி என்பதால் பிற்க்காலத்தில் மதுர்ரா மு.பட்டி,என்றும்,மதுரா,மு. பட்டிக்குடிக்காடு என்றும்,இப்போதும் எங்கள் ஊர் பெயர் விளங்கி வருகின்றது.என்பது ஆதாரமாகவுள்ளது.
                                             முற்காலத்தில் எங்கள் ஊர்களை அரசாட்ச்சி செய்துவந்தவர் இராஜ பரம்பரை யை சேர்ந்தவர் அவர்களை `பாளையக்காரர் என்றும் ,ஜமிந்தார் ,என்றும் ராஜாஎன்றும் ,அழைக்கப்பட்டார் . அவர்களுடைய ராஜாகோட்டை எனும் மிகப்பெரிய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனை இருந்த இடம் இப்போது உள்ள மனிதர்களுக்கு ஒரு சிலபேர்களுக்குத்தான் தெரியும் .அந்த அரண்மனை இப்போது இல்லை என்றாலும் ,அரண்மனை இருந்த இடம் மாறாமல்  அரண்மனைகாடு என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.
                                             அந்த அரண்மனை காடு இப்போது எங்குள்ளது  அதற்க்கு ஆதாரம் என்ன இருக்கின்றது என்றால்  இப்போது இருக்கும் முகாசாபருருக்கும் நேர் கிழக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும் ,மு.பட்டிக்கு வடக்கில் ,மு .பட்டிக்குடிக்காட்டுக்கு வட்த்திசையில் ஒன்றரை கி.மிட்டார்தூரத்திலும்கோணாங்குப்பம்வடக்குதிசைமங்கலம்பேட்டை,யிலிருந்துஆறுகிலோமிட்டர்தூரத்திலும்,கிழக்குதிசையில்பெரியவடவாடி,சின்னவடவாடியிலிருந்து ஐந்து கிலோமிட்டர் தூரத்திலும் நடுவில் காட்டுபகுதியில் தான் அப்போது ராஜா அரண்மனை இருந்தது .அங்கே  கட்டுக்கோப்பான பழைய மதில் சுவர்களும் ,நான்கு திசைகளிலும் தண்ணிர் கிணறுகளும்  ,அரண்மனைக்கு மேற்புறம் பெரிய குளமான செங்குளம் இருந்தது  .அந்த செங்குளம் இப்போதும் இருக்கின்றது.
                           ஆனால் இப்போது ராஜா அரண்மனை அங்கு இல்லை அதே ராஜாவின் வீரசேகர முத்துகிருஷ்ணருடைய வாரிசான உயர்திதிரு பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு அவர்களின் காலத்திலேயே  அரண்மனை காட்டுப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து புது அரண்மனை செங்குளம் அருகில் வடதிசையில் முகாசாபருரில் கட்டப்பட்டது .இந்த அரண்மனையில்தான் இப்போது ராஜ பரம்பரையின் வாரிசுகளான  அவருடைய பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் இன்றும் முகாசாபருரில் வாழ்ந்து வருகின்றார்கள்..
                                       அப்போதைய அரண்மனையின் ராஜா தர்பாரில் ஆயிரக்கணக்கில் பணியாளர்களாக நியமிக்கபட்டிருந்தார்கள். .நமது சுற்று வட்டாரகிராமமக்கள்..இங்கேநூற்றுக்கணக்கானயானைகளும்,ஒட்டகங்களம் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும், கோழிகளும்,வளர்த்து பராமரித்து வந்துள்ளார்கள்.,   

                                                       இந்த பிராணிகளை பராமரித்தலும்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக இடங்கள் அமைத்ததும் ,ராஜா
அரசாட்ச்சி செய்த காலத்தில் தோன்றிய இடங்களே பிற்காலத்தில் கிராமங்களாகி ,அந்தந்த கிராம நிர்வாகத்தையும் பாளையக்காரராலேயே ஆட்ச்சி நடத்தப்பட்டு வந்தது .ராஜாவின் ஆட்ச்சிக்கு உட்பட்ட கிராமங்களான முகாசாப்பரூர்,கோணாங்குப்பம்,காட்டுப்பரூர்,கர்னத்தம்,எடைச்சத்தூர்,சிருவாம்பார், வலசை,பிஞ்சனுர்,மு.புதூர்,தொட்டிகுப்பம்,,சின்னப்பரூர்,மேமாத்தூர்,மு.பட்டி,மு.பட்டிக்குடிக்காடு,சிவனார்குப்பம் ,ராஜபாளையம் ,ரெட்டிக்குப்பம் ,
எருக்கன்குப்பம்,எருமனூர்,சின்னவடவாடி,பெரியவடவாடி,விஜயமாநகரம்
,பூவனுர் ,மங்கலம்பேட்டை,போன்ற ஊர்களை உள்ளடக்கி ஆட்ச்சி புரிந்த ராஜாதி ராஜா மகாராய ராய ஸ்ரீ வீரசேகர,முத்துகிருஷ்ண,பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு ஜமிந்தார் அவர்களால் மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களுக்கு பட்டையங்கள் சூடப்பட்டுள்ளது இன்று வரையில் ஆதாரபுர்வமாக பெயர்கள் மாறாமல் இருக்கின்றது.
                                           
                                                இந்த சுற்று பட்டு கிராமங்களான முகாசாப்பரூர் அனைத்து கிராமங்களுக்கும் தலைமை ஊராகும் .இந்த ஊரை பெரியபரூர் என்றும் அழைக்கப்படுகின்றது.இந்த பெரியபருரில் தான் ராஜாவின் அரண்மனையில் பலவகை  கைவினை தொழிளாளர்கள் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த்தார்கள் .அவரவர் தொழிலுக்கேற்ப தெருக்கள் வாரியாக
வீடுகள் அமைக்கப்பட்டு அது இன்றும் மாறாமல் ஆதாரமாக உள்ளது.
                                                 
                                              பாளையக்காரரிடம் அதிகமான நஞ்சை,நிலங்களும், அதிகமான புஞ்சை நிலங்களும்,எங்கள் சுற்று வட்டாரங்களே ராஜாவின் ஆட்ச்சிக்குட்ப்பட்டு இருந்தது .எனவே பாளையக்காரரை துரை என்று அனைத்து மக்களாலும் அழைக்கப்பட்டார்.
                                           திரு துரை  அரண்மனையில் அப்போது இயந்திர மோட்டார் வாகனங்கள் இல்லாத காரணத்தால் மீனா எனும் மனித தோள்களில் தூக்கி செல்லும் பல்லக்கு மீதில் அமர்ந்து பயணம் செய்து வந்தார்கள்,
                                                  இங்கே யானையிலும்,குதிரையிலும்,ஒட்டகத்திலும் ராஜாஅவர்கள்  வெளியூர் பயணங்களிலும் ஆலயவழிபாடுகளுக்கு செல்லும்போதும் கால்நடைகளைதான் பயன்படுத்தினார்கள்.எனவே அந்ததந்த யானை,குதிரை,ஒட்டகம்,ஆடுமாடுகள்,போன்றவற்றை பராமரிக்கவும்,அவைகளுக்கு தீவினங்கள்,கொடுப்பதற்கும்,பணியாட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இன்றும் தகுந்த ஆதாரங்கள் எங்கள் ஊர் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கின்றது.
                                                 அதைப்போலவே ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஊர் பெயர்கள் பாளையக்காரரால் பட்டயங்கள் சூடப்பட்டுள்ளது.அதாவது ராஜாவின் அரண்மனை சேனைபடைகள் தங்கியிருந்த ஊர் சேனாகுப்பம் (சிவனாற்குப்பம்) ஆடுமாடுகள் காடுகளில் மேய்ந்து வந்தாலும் அவைகளை இரவு நேரங்களில் தங்கவைத்தயிடம் பட்டி என்று அழைக்கப்பட்டுள்ளது .எனவே இவ் வூ ருக்கு பட்டி என்றும்,கால்நடைகள் தண்ணிர் குடிப்பதற்கு பலயிடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டுயிருந்ததால் அந்த ஊருக்கு தொட்டிக்குப்பம்,என்றும்,ஆடுகள் அதிகமாக பராமரிக்கப்பட்டயிடமும் ,கோனார்கள் அதிகம் பேர்கள் தங்கியிருந்தயிடம் கோணாங்குப்பம்,என்றும் பெயர்கள் சூடப்பட்டுள்ளதும் ஆதார பூர்வமாக இன்றளவும் உள்ளது.
                                                  மதுரா .மு.பட்டி,என்றும்,மதுரா மு.பட்டிக்குடிக்காடு இந்த இரண்டு ஊர்களுமே ஒரே ஊர்கள் என்றாலும் பெயர்களில் மாறுபட்ட வித்யாசங்கள் எப்படி வந்தது/? இந்த வினாவிற்கு விடைதான் நான் முதியோர்களிடம் கேட்டறிந்தவை இதோ  1)மு.பட்டியை சேர்ந்து இருப்பதால் பட்டி ,என்றும்  இது காடுகளுக்கு செல்லும் வழியில் மக்கள் குடியேறிய காரணத்தாலும் குடிக்காடு என்றும்,  மு.பட்டியையும் குடிக்காட்டையும் இணைத்து  மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்று அந்த காலத்திலேயே பாளையக்காரரால் பட்டயம் சுடப்பட்டுள்ளது என்றும்,இப்பட்டிக்குடிக்காட்டில்
முற்காலத்தில் தோணான் என்பவன் எவருக்குமே அஞ்சாத நெஞ்சம் படைத்து அவன் வைத்ததுதான் சட்டம்,திட்டம்,எல்லாமே நடந்ததாகவும் அவன் குடியிருந்தால் தோணான் குடிக்காடு என்றும், பட்டியும் குடிக்காடும் இணைத்து  மு பட்டிக்குடிக்காடு என்றும் நமது சுற்றுபட்டு கிராமங்களை பாளையக்காரர் ஆட்ச்சி செய்து வந்ததால் பலஊர்கள் ஒன்றுபட்டிருந்ததால் அப்போது அதுவே மதுரா என்றும் அழைக்கப்பட்டதாகவும் அந்த காரணத்தால் மதுரா மு.பாட்டிஎன்றும் ,மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்றும், பாளையக்காரர் காட்டுஅரன்மனையை விட்டு முகாசாப்பருரில் வந்து புது அரண்மனைகட்டிடம் அமைத்து தங்கி வாழுகின்ற இப்போதய முகாசாபருரை தலமைஇடமாக கொண்டதால் ,ஒரு பிள்ளைக்கு அவன் பெயருக்கு முன்னால் அவனுடைய தந்தை யின் முதலெழுத்தை எழுதுவதைப்போல அடையாளச்சின்னமாக கூட்டுக்குடும்ப கிராம வாழ்க்கை நடைமுறையில் இருந்த காரணத்தால் பழையதை மறக்காமல் மதுரா.மு.பட்டி,என்றும்,மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்றும் இன்றளவும் இருக்கின்றது.    
                                            பெரியபரூர்,சின்ன்ப்பரூர்,மு.புதூர்,காட்டுப்பரூர்,மேல்மாத்தூர்   எடைச்சத்தூர்
சிருவாம்பார்,வலசைபிஞ்சனூர்,,என்பவைஊர்களாகவும்,கோணாங்குப்பம்,சேனாகுப்பம்தொட்டிகுப்பம்,ரெட்டிக்குப்பம்,எருக்கன்குப்பம்,வீரரெட்டிக்குப்பம்,போன்றவைகள் குப்பங்க்களாகவும்,கிராமங்களின் பெயர்கள் அப்போதே பட்டயங்கள் சூட பட்டுள்ளது.அது இன்றும் ஆதாரபூர்வமாக உள்ளது.
                                               மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களிலும் தலைவராக விளங்கியவர் ஆலய வழிபாடுகளாக இருந்தாலும் ,மத நல்லிணக்க சம்பிரதாய சடங்க்குகளாகயிருந்தாலும் சரி தலைமை தாங்குபவார்கள்.பளையக்காரர்ஆவர்கள்.அவர்களின்ஆட்ச்சிக்குஉட்பட்டது தான் மதுரா கிராமங்கள் ஆகும்.
                                                   அந்த மதுராவே இக்காலத்தில்  பேருராட்ச்சி ,நகராட்ச்சி,ஊராட்ச்சி ,மாநகராட்ச்சி,என்றும் விளங்கி வருகின்றது . அப்போது
பாளையக்காரர் ஆண்டது தலைவராட்ச்சி, நமது சுற்று வட்டாரகிராமங்க்களை கட்டிகாத்த பெருமை திரு பாளையக்காரரை தவிர வேறு யாராலும் முடியாத விஷையமாகவே இருந்துவந்தது..
                                                    அதன் பிறகு இந்தியா சுதந்திரம்அடைந்ததபின்னரும்
பாளையக்காரர் ஆட்ச்சியே நீடித்தது . இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும் ஒரே தலைவர் ஆட்ச்சியா என்று மக்களுக்குள் மனக்குழப்பங்கள் எழுந்தது .எனவே பாளையக்காரரை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்..துரை யின் பெயரில்  கிராமங்களுக்குள் எதிர்ப்புகள் ஆரம்பித்தன .அப்போதுதான் அன்னை இந்திரா காந்தி நமது இந்திய நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தார்கள்.
                                         இந்திராகாந்தி அம்மையார்  அவசர ஆணை பிறப்பித்தார்கள்.அதாவது தமிழ் நாட்டில் பெரும்நிலக்கிழார்கள்,மற்றும் அதிகமாக நிலபுலன்ங்க்கள் வைத்திருப்போரிடமிருந்து ,நிலங்களை எடுத்து ஏழை,எளிய மக்களுக்கு நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் கொடுக்கும் அவசர ஆணையை பிறபித்த காரணத்தால் நமது துரை பாளையக்காரர் நிலங்களும்    நமது சுற்று வட்டார ஏழை எளிய மக்களுக்கு நில உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் பிரித்து கொடுக்கப்பட்டது..அப்போதிலிருந்து திரு பாளையக்காரரின் வசமிருந்த தலைவர் பொறுப்புக்கும் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
                                                           அதன் பின்னர் அரசாங்கம் ஆணை பிரபித்தது ஊராட்ச்சி ,நகராட்ச்சி,பேரூராட்ச்சியாக மக்கள்தொகைக்கேற்ப  மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்ததால்  முதல் முதலாக முகாசாபரூரில் திரு பாளையக்காரரை எதிர்த்து போட்டியிட்ட திரு
மருதமுத்து அவர்கள் தலைவராக தேர்ந்த்தேடுக்கப்பட்டு வெற்றிப்பெற்றார் ,

                                               திரு மருதமுத்து அவர்கள் தலைவர் பொறுப்பேற்று நமது சுற்று வட்டாரங்க்களை ஆட்ச்சி நடத்தி வந்தார் .அதன் பிறகு அரசாங்கம் ஆணை பிறப்பித்தது முகாசாபரூர் பேருராட்ச்சி யை பிரித்து ஒவ்வொரு கிராமங்களும் ஊராட்ச்சி மன்றங்களாகலாம் ,மேலும் அந்தந்த ஊர்களுக்கும் சொந்த கிராம மக்களே ஊராட்ச்சி மன்ற தலைவராகலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்த காரணத்தால் நமது ஊர் மதுரா மு.பட்டியும் ,மதுரா மு.பட்டிக்குடிக்காடும் சேர்ந்து மு.பட்டி க்கு தனி ஊராட்ச்சி மன்ற ம் ஆகும் தகுதியைப் பெற்று முதல் முதலாக மு.பட்டியின் ஊராட்ச்சி மன்ற தலைவராக மு.பட்டியைச்சேர்ந்த திரு இரா.சுப்பிரமணியன் அவர்கள் தலைவரானார்.

                                                 அதன்பிறகு இரண்டு பெண்ங்கள் உள்பட பட்டியை சேர்ந்தவர்களும்,பட்டிக்குடிக்காட்டைச் சேர்ந்த இரண்டு பேர்களும் ஊராட்ச்சி மன்றதலைவர்களாகவும்,உதவிஊராட்ச்சிமன்றதலைவர்களாகவும்,பொறுப்பேற்று  நமது ஊரை இன்று வரையிலும்  கட்டிக்காத்து வருகின்றார்கள் .என்பதால் நமக்கும் நமது ஊருக்கும் ,பேரும் ,புகழும்,அடைந்து வருவதை எண்ணி மனம் மகிழ்ச்சியடைகின்றது.
                                                        முன்பு நமது சுற்று வட்டார மக்களெல்லாம் நியாய விலை கூட்டுரவு மலிவு பொருட்கள் வாங்குவதற்கு  முகாசாபருருக்குதான் சென்றுபொருள்களைவங்கிவரவேண்டியகட்டாயம் இருந்துவந்தது..இப்போது அந்த நிலைகள் முழுவதும் மாற்றமாகி அவரவர்கள் சொந்த ஊரிலேயே சொந்த ஊர்மக்களில் ஒருவரை ஊராட்ச்சி மன்ற தலைவர்,மற்றும் உதவி ஊராட்ச்சிமன்றத் தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமையை மக்கள் பெற்றிருப்பதும்,அனைத்து வித நியாய விலை பொருள்களையும் நமது  ஊரிலேயே பெற்றிடவும், அரசாங்கம் வழிவகைச் செய்து நமது ஊரும் இந்த உலகத்தில் சொந்த காலில் நிற்க்கும் முழு அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதை எண்ணி நமது மக்கள் அனைவரும் ஆனந்த பெரு மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயமல்லவா .
                                                   எல்லா வளங்களும் நிறைந்த நமது ஊருக்குள்  ஒரு அஞ்சல் அலுவலகமும், சிறு சேமிப்புக்கான அரசாங்க வங்கி கிளையும்,மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு வேண்டிய ஒரு அரசாங்க மருத்துவ சுகாதார மையமும்,தண்ணிர் கிடைக்காத நமது ஊருக்குள் எப்பொழுதும் தண்ணிர் தட்டுப்பாடு இல்லாத ஊராக விளங்கிட அரசாங்கத்தின் அனுகிரகம் கிடைத்துவிட்டால்  ,!"நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது ,"என்பது போல ,நமது ஊருக்கு நிகர் வேறேது,என்றும் ,'"என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்'"என்பது போல" சொல்வதெல்லாம் கிடைக்கும் எங்கள் வளநாட்டில் " என்று நமது ஊரின் பெரும்புகழ் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும் .அதை எண்ணி நம்மூர் மக்களுள்ளம் மகிழ வேண்டும்.
                                          நமது ஊர் மு.பட்டி , பட்டிகுடிக்காடு கிராமத்திற்கு அணுகவேண்டிய முக்கிய விபரங்கள் இந்த உலகத்தில்
,1)கண்டம் -ஆசியா,
  2) தேசம் -இந்தியா,(பழைய பெயர் பாரதம் )
3)நாடு -தமிழ் நாடு ,
4)மாவட்டம் -கடலூர் (பழைய தென்னாற்காடு ,வள்ளலார் மாவட்டம் )
5)வட்டம் -விருத்தாசலம் வட்டம் ,(பழைய பெயர் திருமுதுக்குன்றம் ,விருதை,)
6)தலைக்கிராமம்  முகாசாபரூர் ,(பழையபெயர்  பேரூர்-பெரியபரூர்.)
7) எங்கள் சொந்த ஊர் -மதுரா மு.பட்டி,-​  மதுரா மு. பட்டிகுடிக்காடு,)
8)எங்கள் ஊர்க்கு சுற்றுவட்டார கிராமங்கள் -
    வடதிசையில்  மு.பரூர் ,
தென்திசையில் -தொட்டிக்குப்பம்,
-கீழ்த்திசையில் -வடவாடி
 ,-மேல்திசையில் -மு.புதூர்.
 மற்றும் சின்னபரூர்,கச்சிப்பெருமானத்தம்,மேமாத்தூர்,கோணங்க்குப்பம் ,பெரியவடவாடி,விஜயமாநகரம்,எருமனூர்,சிவனாற்குப்பம்,எடைச்சத்தூர்,சிருவாம்பார்.கர்ணத்தம் .காட்டுபரூர்,அகரம்.மங்கலம்பேட்டை.இராஜபாளையம் ரெட்டிகுப்பம்.எருக்கன்குப்பம்.போன்ற சுற்றுவட்டார கிராமங்களாகும்.
9) பள்ளிகள் -அரசினர் ஆரம்பபள்ளி,அரசினர் ஆதிதிராவிட ஆரம்பபள்ளி,
10) அரசினர் உயர்நிலை பள்ளி  முகாசாபரூர் ,
11) விருத்தாசலம் கொளஞ்சியப்பார் அரசு கலைக்கல்லூரி.
12)ஆலயங்கள் -படவேட்டையம்மன். கோயில் -மன்மதன் கோயில்-மகா மாரியம்மன் கோயில் ,பெரியநாயகியம்மன் கோயில் ,ஆனந்தாயியம்மன் ,மருவத்துரம்மன். கோயில் ஐயப்பன் கோயில் போன்றவைகள் எங்கள் சொந்தஊர் கோவில்தலங்களாகும்.
13)விருத்தாசலம் -விருத்தகிரிஷ்வரர் -விருத்தாம்பிகை   பழமலைநாதர் பெரியகோவில்,  
        மணவாள நல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக் கோவில்,  மங்கலம்பேட்டை    -மங்கநேஷ்வர கோயில், ---கோனாங் குப்பம் -புனிதமேரி மாதா திருத்தலம்  -துரோபதையம்மன் கோயில் -அங்காளபரமேஸ்வரி கோயில் ,ஈஸ்வரன் கோயில்,அய்யனார்கோயில்,போன்றவைகள் சுற்றுவட்டார திருத்தலங்களாகும்.

                       எங்கள் ஊருக்கு பேருந்து மார்க்கம் விருத்தாசலத்திலிருந்து  சிருவாம்பார் செல்லும் வழியில் முதல் எருமனூர்,இரண்டாவது  ரெட்டிகுப்பம்,மூன்ராவது தொட்டிகுப்பம்,-**நான்காவது நிறுத்தமே எங்கள் ஊர் மு.பட்டி பேருந்து நிறுத்தமாகும்.
                                 
                                     எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் அவரவர் கிராமங்களில் ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வந்தாலும் , முகாசாபரூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் தான் உயர்நிலை பள்ளிபடிப்புக்காக வந்து படிக்கவேண்டும்.என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

                                           நான் பிறந்த ஊரின் பெருமையையும்,புகழையும்,நான்  பயின்ற பள்ளியின் ஆசாரியர்கள் ,எனது பெற்றோர்கள் மூலமாகவும்,நான் அறிந்தவற்றை  இணைய தளம் மூலமாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதுடன் ,எனது ஆசரியர்கள்  பெருந்தகைக்கும்,என்னை ஈன்ரெடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகபடுத்திய என் அம்மா அகிலாண்டம்மாள், அப்பா ப.இராமசாமிக்கும்  ,மிக்க நன்றியையும்,வணக்கத்தையும், இதன்மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.                   
                  ,                           மேலே குறிப்பிட்டுள்ள மதுரா மு.பட்டி,மற்றும் மதுரா மு,பட்டிக்குடிக்காட்டின்பெயர்கள்வேறபாட்டினையும் ,மற்றும் முற்காலத்தில் நமதுஊர்களைஆண்டபாளையக்காரர்வரலாற்றையும்,எனக்குதெரிந்தவற்றையும்,நமது முன்னோர்களிடம் கேட்டறிந்த  விபரங்களையும் இதன் மூலம் இணையதளத்தில் எழுதி இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டி மனம் மகிழும் உங்களின் அன்பன் .

                                                                                 

                                        மு,பட்டிக்குடிக்காடு .இரா.கோவிந்தராசு ,
                               குஜராத் மாநிலம்,        சாபர்மதி,      அகமதாபாத்.
                                                         தேதி.06-07-2014

(குறிப்பு) ​ ,மேலே உள்ள வரலாற்று விபரங்கள் முன்னோர்களிடம் ,கேட்டரிந்தவையும்,நான் ஒரு சிலவற்றை கண் கூடாக நேரில் பார்த்தவையும்,இங்கே தெரிவித்துள்ளேன் .இன்னும் எவ்வளவோஎனக்கு தெரியாதவைகள் இருக்க கூடும், எனவே நமது ஊரின் விபரங்கள் தெரிந்தவர்கள்  இந்த தொலை தொடர்பு எண்ணில்  (09879042958) தொடர்புக்கொண்டு விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.
                                                            நன்றி , வணக்கம்.
                                           ​​