''தர்ஷீல் குட்டி பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் "
(நான்காம் ஆண்டு பிறந்த நாள் ) (04-12-2014)
அன்பான செல்வமுத்தே அழகான பவழமுத்தே
இன்பமான தங்கமுத்தே எங்கள் வீட்டின் சிங்கமுத்தே,
உன்னைக்கான வேண்டியிங்கு ஒவ்வொருநாள் தவமிருந்தோம்
கண்ணான கண்மணியே -எங்கள்கவலைத்தீர நீ பிறந்தாய்,
முன்னோர்கள் புண்ணியத்தால் கண்ணாயிங்கு நீ பிறந்தாய்
முத்தான இரத்தினமே -உன் முகம்பார்த்து மனம்மகிழ்ந்தோம்
தனலட்சுமி ஈன்றெடுத்த தங்கமான ரோஜாவே
தரணி புகழ் அடைய வேண்டும் தர்ஷில் எங்கள் இராஜாவே ,
குட்டியப்பார் கிருபையாலே சுட்டிப்பிள்ளை நீ பிறந்து
கட்டிமுத்தம் தந்தோமடா குட்டிமுத்து தவப்புதல்வா
கந்தசாமி அஞ்சலையின் சொந்தமான வாரிசே நீ ,
பந்த பாசம் நிறைந்த -எங்கள் பாசமுள்ள குணசீலா
குட்டியப்பார் அருளாலே எங்கள் குலம்காக்க பிறந்தவனே
பட்டிகுடிக்காட்டு உன் தாய் தனத்திற்க்கும் பக்கபலம் நீதானே !
அன்னை,தந்தையர்க்கு அருந்தவத்தால் வந்துதித்த
சின்னமணி ச்சுடரே சிங்கார வடிவேலா
தென்னை மர நிழல் போல தென்றலாக வீசவேண்டும்
தேவஸ்தான புடையூரில் திருமாலாய் திகழவேண்டும்
பனை,தென்னை,மரம் போல பயனாக திகழவேண்டும்
உன்னையீன்ற பெற்றோர்கள் உள்ளம் மகிழவேண்டும்.!
அன்புடன்
பட்ட க்குடிக்காடு -இரா கோவிந்தராசு
அயிலண்டம்மாள் , இராமசாமி ,அஞ்சலை ,கந்தசாமி
இரா.கோவிந்தராசு கண்ணகி , கோ . இராஜலட்சுமி,கோ . இராகுல் ,
அ .கொளஞ்சி. கொ .செல்வாம்பாள் கொ .சந்தோஷ்குமார்,
கொ .செல்வகுமாரி , கொ . அருண்குமார்
மற்றும் , அப்பா க . குட் டி முத்து , அம்மா, கு. தனலட்சுமி ,
தங்கை கு, நிகிதா .
சாபர்மதி,அகமதாபாத் ,குஜராத்------(04-12-2014)
😍
ReplyDelete