Wednesday, 13 April 2016

"முத்திரை பதிதத்த சித்திரையே வருக"

அன்னை தமிழ் மகளே
அன்பு திரு மகளே,
உன்னை காண்பதற்கு
ஒரு வருசம் காத்திருந்தோம்!....
 தமிழ்-
மண்ணை குளிர வைத்து
மக்களை மகிழ வைக்க
பெண்ணாக  உருவெடுத்து
பிறந்து வரும் சித்திரையே!...

து ர் (ன்)முகி பெண்ணுருவில்
நின்  திரு மேனி அவதரித்து
பொன்னருள் புரிந்திடவே
பொற்பாதம் பதிக்கின்றாய் !...

மன்மத ஆண்டு சித்திரைபோல்
மாற்றங்கள் தந்திடாமல்
உன்னருளால் உலக மக்கள்
உயர்நிலை பெற வேண்டும்!...

பின்னகம் வராமல் கொடிய
பிணிகளும் அண்டாமல்
அன்ன களஞ்சியமாக்கி நல்
அருள்புரிய வேண்டுகின்றோம் !...

இன்னல்கள் பறந்தோடி இன்பங்கள் மிகுந்து
எண்ணங்கள் ஈடேரி  எல்லையில்லா
மகிழ்ச்சி பொங்க
வண்ண உடையணிந்து வலது கால்
முன் வைத்து,
அன்ன நடை நடந்தது,அழகு தேவதையாய்
உன் தாய் வீட்டு தமிழகத்தில்
புத்தாண்டு  பொன் மகளாய்
முத்திரை  பதித்த எங்கள்
சித்திரை திருமகளே வருக !.. உந்தன்
முகம் பார்த்து மகிழ்திடுவோம்
முத்தான தமிழ் மகளே !... எங்களுக்கு
இன்பம் தருக !!!!

     அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  !.

   அன்புடன்,
கவிஞர்,பட்டிக்குடிக்காடு,இரா,கோவிந்தராசு,
நன்றி வணக்கம்!.   14-04-2016

my wepsite blogger
pattikudikadu r govindharaju
கைபேசி.09879042958

e mail/ govindharaju1209@gmail,com
e.mail/pattikudikadurg1205@gmail.com
  

3 comments:

  1. மிகவும் அருமை .....மிக்க நன்றி..

    ReplyDelete
  2. மிகவும் அருமை .....மிக்க நன்றி..

    ReplyDelete
  3. மிகவும் அருமை கவிஞர் ஐயா.

    ReplyDelete