Monday, 29 September 2014


 ''   பிறந்த நாள்  நல வாழ்த்துக்கள் ''

               
 கோ.இராஜலட்சுமி

உடல் ஆரோக்கியமும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
வளமான வாழ்வும்
வற்றாத நீர் ஊற்றாய்
வாடாத மலர் போன்று
பெற்றவர்கள் நல்லாசியும்
உற்றார்களின் நல்லன்பும்
நிறைந்த செல்வமும்
நீண்ட ஆயுளும் பெற்று
எல்லாம் வல்ல
இறைவன் அருள் பெற்று
பல்லாண்டு வாழ்கவென்று
நல்லாசி வழங்குகின்றோம்
நாங்கள் ஈன்ற நல்மணியே !

அன்புடன்
அப்பா .இரா.கோவிந்தராசு
அம்மா  கோ.கண்ணகி.
தம்பி -கோ.ராகுல்
பாட்டி -இரா.அகிலாண்டம்.
க. அஞ்சலை
மாமா -க. குட்டிமுத்து,
அக்காள் -கு.தனலட்சுமி
தர்ஷில்,நிகிதா ,
கொளஞ்சி,செல்வாம்பாள்
சந்தோஷ்குமார்,
செல்வகுமாரி ,அருண்குமார்

   தேதி -(30-09-2014)
           சாபர்மதி 

Saturday, 20 September 2014

''பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''


     ''பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''
      -----------------------------------------
      (21-09-2014) தே .புடையூர் )

        "பொன்னழகி நிகிதா "   
      ---------------------------------------

கொடியில்பூத்தகுண்டு மல்லி ,-எங்கள்
மடியில் தவழும் மதுரை மல்லி ,
முகம்பார்த்தால் முத்தழகி -குட்டி
முத்து தனம் ஈன்றபெண்ணழகி ,
புடையூரில் பிறந்த பொன்னழகி
பொன்சிரிப்பு  முக கண்ணழகி ,
அழகில் இவள் கிளியோபட்ரா
அன்னநடையில்  ஊர்வசி ,
கண்களோ விண்மீன்கள்
காந்தம் போன்ற பார்வை
மேனி மேனகைமெல்லிடை ரதி ,
நாணிய முகத்தாள்
நகைக்கும் செவ்விதழ் ,
பற்களோ  முத்துக்கள்
பவழம்போன்ற  கன்னம்
முத்துக்கு கிடைத்தஇரத்தினம்
தனலட்சுமி பெற்ற தங்க பதுமை,
சொக்கவைக்கும் சுந்தரி
நிக்கிதா எங்கள் செளந்தரி ,-உன்
மூன்றாமாண்டுபிறந்த நாளில்
ஆண்டவன் அருளால்
நீண்ட ஆயுளும்நிறைந்த செல்வமும்
கல்வியில் உயர்ந்துகளிப்படைய
வேண்டுமென எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
பல்லாண்டு வாழ்க -என
நிக்கிதா உன்னை நாங்கள்
நெஞ்சார வாழ்த்துகின்றோம்.!

          அன்புள்ள ,
அப்பா-க.குட்டிமுத்து,அம்மா - கு.தனலட்சுமி-
அண்ணன் -கு.தர்ஷில்
பாட்டி-அஞ்சலை-கந்தசாமி ,அகிலாண்டம்-இராமசாமி
தாத்தா-பாட்டி இரா.கோவிந்தராசு-கண்ணகி,
மாமா-கோ.இராகுல்   சித்தி -கோ.இராஜலட்சுமி
தாத்தா-பாட்டி -அ கொளஞ்சி -செல்வாம்பாள்
k . சந்தோஷ்குமார் k ,செல்வகுமாரி , k அருண்குமார்.

                   (தேதி-21-09-2014)