" நூல் வெளியீட்டு விழா " வாழ்த்துச்செய்தி!!!
கவிஞர்,எம்.இ.பிரபாகர பாபு அவார்களுக்கு !!!!
கவிஞர்.பட்டிக்குடிக்காடு. இரா,கோவிந்தராசு, குஜராத்.சாபர்மதி.
****************************************
நூலின் பெயர்,
" ஒரு கடல் ஒரு கை விளக்கு " !
********-********************************
நூல் ஆசரியர்,
கவிஞர் , எம்.இ, பிரபாகர பாபு அவர்கள்
, பணி ஓய்வு துணை பொது மேலாளர், பேங் ஆப் இந்தியா! சென்னை,
நாள் -17-04-2016.
இடம் எழும்பூர், சென்னை.
--------------------*------------------------------------------
மேதகு வைரவரி கவிஞர் , M E .பிரபாகர பாபு அவர்கள் திவ்விய சமூகத்திற்கு எனது முதற்க்கண் வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன் .!
நான் பல வருடங்களாக கவிஞர் பிரபாகர பாபு அவர்களை நன்கு அறிவேன்.
இவர் எழுதி வெளியிட்டுள்ளது 34 நூல்களாகும், கவிஞர் பிரபாகர பாபு அவர்கள் எழுதிய நூல்களை படித்து மகிழ்ந்தவர்கள் பட்டியலில் நானும் ஒருவன் என்பதால் பெரு மகிழ்ச்சி யடைவதுடன் மட்டுமல்லாமல் , என்னையும் ஒரு கவிஞனா க்கிய இக்கவி புலவரை எனது குருவாகவும் ஏற்று வணங்குகின்றேன்!
இக்கவியரசர் ஒரு கவிஞர் மட்டுமல்ல,.....! கவி இருக்கும் நூல் களஞ்சியம் என்றால் மிகையாகாது,
இக்கவி புலவரால் வார்க்கப் பட்ட சங்க கால இலக்கியங்கள் ,இக்கால பாமர மக்களும் படித்து பொருளறியவும் அதன் பயன் பெறவும்,தனது ஆற்றலினால்புதிப்பிக்கப்பட்ட சங்க இலக்கிய நூல் முத்தொள்ளாயிரம் ,பத்து பாட்டு,எட்டுத்தொகை, பதிற்று பத்து ஐங்குறுநூறு, குறுனந்தொகை,நற்றினை,ஆத்திச்சூடி கட்டுரைகள்,சந்த கவிதைகள், புதுக்கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள்,பொன்மொழிகள், மற்றும் மொழிப் பெயர்ப்புகள் ஏராளமான சாதனைகள் படைத்த சாம்பவானாக விளங்கும் கவிஞர் பிரபாகர பாபு அவர்கள் இவ்வளவு பெரிய சாதனையாளராக விளங்குவதற்கு காரணமானவர்களாகிய இவரின் பெற்றோர்கள் முதல் காரணம் இரண்டாம் காரணம் இவரின் நல்ல குருக்கள் ,மூன்றாவதாக இருக்கும் மிக முக்கியநபராக விளங்குபவர் தான் இவரின் இல்லத்தரசி,துணைவி,மனைவி தூணாக நிற்க்கும் இவரது சுமைத்தாங்கி,அன்பின் இலக்கணமாக விளங்கும் இவரது அருமை மனையாள் திருமதி பிரபாகர பாபு ஆகும் !!!!.
ஒவ்வொரு ஆண் சாதனையாளருக்கு பின்னால் ஒரு பெண் அங்கம் வகிப்பார்கள். இதற்கு சான்று , அடையாளம் என்றால் திருமதி பிரபாகர்பாபுவை சேறும்!.
கவிஞர் பிரபாகர பாபுவின் 34 நூல்கள் படைப்பாற்றலுக்கு ஊக்கமும், ஆக்கமும் ,கொடுத்து, உருதுணையாக இருந்தும், இவருடைய எழுத்தாற்றலுக்கு பக்க பலமாக இருந்து செயல் பட்ட திருமதி பிரபாகர பாபு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை இவ் வாழ்த்து செய்தி மூலமாக உரித்தாக்குகின்றேன் !!!.
மேன்மேலும் கவிஞர் பிரபாகர பாபு அவர்களின் தமிழார்வத் தொண்டு இத்தரணியெங்கும் காற்றலையாக பரவட்டும்!.......
ஒட்டு மொத்த உலக தமிழர்களெல்லாம் எட்டு தொகை, பத்து பாட்டுகளையும்,சங்க இலக்கியங்கள் யாவையும் படித்து மகிழட்டும் என்று !!!!...
வாயால் அல்ல,வார்த்தைகளால் அல்ல , என் இதய பூர்வமாக கவிஞர் பிரபாகர பாபுவின் அளப்பறியா தமிழ் ஆர்வத்தையும்,தமின், தமிழுக்காக ஆற்றி வரும்அறிய நற்த்தொண்டை பாராட்டி,இவரை வாழ்த்தி வணங்குகின்றேன் !!!!.
இந்த தருணத்தில் எனது குரு ஆசான்களை நினைவு கொண்டு
1)முதல் குரு கவிஞர் பட்டிக்குடிக்காடு.மு.கதிர்வேலு,
2)காரைக்காலை சேர்ந்த திரு சண்முக சுந்தரம் அவர்கள் சாந்த்கேடா தமிழ்ச்சங்க "தமிழோசை" முதன்மை ஆசரியர்.
3) கவிஞர்,பிரபாகர பாபு அவரகள். எனக்கு ஆக்கமும்,ஊக்கமும் கொடுத்து என்னை எழுத்துலக இலக்கிய கவிஞனென்றும்,பாவலர் என்றும் வாழ்த்திவரும் "என் நெஞ்சில் நீங்கா கவியரசராக திகழும் " திரு கவிஞர் பிரபாகர பாபு ஆகும்.
4) திரு .மு,சுப்ரமணியம் அவர்கள், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து கவியெழுத தூண்டு கோலாக விளங்கும் நான் அன்பாக அழைக்கும் தம்பி கூந்தலூர் மு.சுப்ரமணிம்ஆகும்.அனைவரையும் வணங்குகின்றேன்,!!!!.
கவிஞர் பிரபாகர பாபு அவர்களை வாழ்திய புலவர் பெருமான்களும், ஆன்றோர்களும்,சான்றோர்களும்,கவிஞர் பெருமான்களும் பேராசாரியார்களும், முனைவார்களும் எண்ணிலடங்கா!!!!....
அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் ஏராளம்!.......
இவர் கலந்துக்கொண்ட கவியரங்கங்களும், பட்டி மன்றங்களும் ஏராளம் !!!....
இக்கவியரசரின் தமிழார்வத்தின் தாராளமனமே இதற்கு இவரிடமுள்ள ஆதார சான்றுகளே ஆகும்!.
பணி ஓய்வு பெற்ற பின்னரும் சமூக சேவைகள் புரிந்து எண்ணிலடங்கா உதவிகள் புரிந்து வாருகின்றார்.
வாழ்க தமிழ்! வளர்க கவிஞர் பிரபாகர பாபுவின் தமிழ் நற்த்தொண்டு!!!!!....!
இதயமுடன் வாழ்த்தும் நெஞ்சம்.
கவிஞர்.பட்டீக்குடிக்காடு.இரா.கோவிந்தராசு.
நன்றி! வணக்கம்!
தேதி,16-04-2016. தொடர்புக்கு
கைபேசி.09879042958.
e/mail. Govindharaju 1209@gmail,com.
my blogger,pattikudikadu r govindharaju,